Dr. C. செண்பகராமன் பிள்ளை (15.9.1891-26.5.1934)

on Saturday, December 4, 2010


பிரிட்டனை,ஏன் இந்த உலகையே நடுநடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர் ...
"எம்டன்" போர்க்கப்பலை இயக்கி சென்னையில் இவர் போட்ட குண்டுகள் லண்டனை கிடுகிடுக்க வைத்தன...
"இந்திய தேசிய தொண்டர் படை" யை ஜெர்மனியில் நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-கு வழிகாட்டியாக இருந்தவர்...

நாம் அனைவரும் வீரத்துடனும்,நெஞ்சம் விம்மும் பெருமிதத்துடனும் முழங்குகின்றோமே
"ஜய்ஹிந்த் " என்று ....அந்த மந்திரச்சொல்லை முதல்முதலாக உச்சரித்தவர்...

வாழ்நாள் முழுக்க இந்திய விடுதலையையே சுவாசித்துக் கொண்டு நாடுநாடாகத் திரிந்தார். இவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று பிரிட்டனும் பொருமிப் பொருமி நாடுநாடாக கொலைஞர்களை பின்னாலேயே அனுப்பியது...கடைசியில் தோல்வி தான் அதற்கு மிஞ்சியது...

ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததால் ஆத்திரம் அடைந்த நாஜி கட்சியினர் "மெல்லக் கொல்லும் நஞ்சு " வைத்து ,பலவீனமாய் நிராயுதபாணியாய் இருந்தவரை கோழைத்தனமாக அடித்துக் கொலை செய்தனர்!!!

1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.

No comments:

Post a Comment